Monday, March 30, 2020

நேருவும் - சர்தாரும்

உங்களுக்கு நரேந்திர மோதி மீது விமர்சனங்கள் இருக்கலாம்...
மோதிதான் இந்தியாவின் ஆக மோசமான பிரதமராக கூட இருக்கலாம்...
ஆக சகிப்புத்தன்மை இல்லாத முதல்வராக அவரது குஜராத் வரலாறு தெரியலாம்...
பல மாதங்களாக அவர் காஷ்மீரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதை கண்டு கோபப்படுங்கள்..  
பலலட்சம் வட இந்தியரை இந்த ஊரடங்கிலும் நடையாய் நடக்க விட்டு சாகடிப்பதற்காக விமர்சியுங்கள்.... 
அவர் கோடிகளை கார்பரேட்டுகளுக்கு கொடுத்துவிட்டு நம்மிடம் கையேந்தும் போது  
பட்டேல் சிலையை கயலான் கடையில் போடு என்ற மீம்ஸூகளை ஏற்க முடியவில்லை  

சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உங்களுக்கு அவரையும் ஒரு சங்கியாக யோசிக்க வைக்கிறது..
 
வரலாறு இதுதான்........
இந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளை அது. அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனைகள் மும்முரமாக இருந்த சமயத்தில், 1947 ஆகஸ்ட் முதல் நாளன்று படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.

"ஓரளவு சம்பிராதயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்த கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்."

நேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் எழுதினார், ''அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.''

கடிதத்தில் படேல் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார், "எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்."

"நமது நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்..." என்று இளகிய நெஞ்சுடன் கடிதம் எழுதினார் இரும்பு மனிதர்.

படேலின் உணர்வுகள் வெறும் சம்பிரதாயமானவையோ, வெற்று வாய்ச்சவடால்களோ அல்ல. படேல் இறப்பதற்கு சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் நேருவை பற்றி அவர் சொன்னது மரண சாசனத்திற்கு சமமானது.

1950, அக்டோபர் இரண்டாம் தேதியன்று இந்தோரில் ஒரு பெண்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்ற படேல் அங்கு உரையாற்றியபோது, ''இப்போது மகாத்மா காந்தி நம்முடன் இல்லை, அவர் தன்னுடைய பிரதிநிதியை நியமித்து அதனை அறிவித்தும் விட்டார். காந்தியின் சீடர்கள் அவர் சொன்னதை அடியொற்றி நடக்கவேண்டும்.''

நேருவிற்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றாலும், இருவரும் எதிரிகள் இல்லை என்பதும் உண்மையே. படேல் யதார்த்தவாதி என்றால், நேரு கனவு காணும் அரசியல்வாதி. படேல் அமைப்பின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால் நேருவிற்கு தேசிய அளவில் இருந்த புகழ் இரும்பு மனிதருக்கு இல்லை.

இருவரும் காந்தியின் சீடர்களே. நேருவே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் காந்தி. நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகும் முறை மற்றும் உலக அளவில் அவருக்கு இருந்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டே காந்தி இந்த முடிவை எடுத்தார்.

காங்கிரஸார் படேலின் குடும்பத்தினரை மறந்து விட்டதாகவும், ஆனால் நேருவின் பரம்பரை, ஆட்சிப் பொறுப்பில் தொடர்வதாகவும் மற்றொரு பிரசாரம் கூறுகிறது. இதில் உண்மை எள்ளளவும் கிடையாது

உண்மையில், நேரு உயிருடன் இருந்த காலத்தில் தனது ஒரே வாரிசான இந்திரா பிரியதர்ஷினியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்கவில்லை. நேருவின் உதவியாளராகவே இந்திரா செயல்பட்டார். 

ஆனால் 1950இல் சர்தார் படேல் இறந்த பிறகு, நேரு படேலின் பிள்ளைகள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார். இந்திராவின் மீது காட்டிய அதே அக்கறையை, சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் மீதும் நேரு காட்டினார். 1952க்கு முன்னரே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நேரு.

மணிபென் படேல் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1957இல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் காங்கிரஸ் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது.

1953 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரகவும் 1957 முதல் 1964 வரை குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் அவர்.

நேருவின் காலகட்டத்தில் காங்கிரஸில் மணிபென் படேலுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல் வல்லபாய் படேலின் மகன் தஹ்யாபாய் படேலுக்கும் காங்கிரஸ் சிறப்பான மரியாதையை வழங்கியது.
1957 மற்றும் 1962இல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1973 முதல் தனது வாழ்நாள் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மணிபென் மற்றும் தஹ்யாபாய்க்குக் வாய்ப்பு வழங்கப்பட்டபோது உன்மையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

அதாவது சர்தார் படேலின் மகனும், மகளும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டனர்.

படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது படேல் ராணுவ பலத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக்கியிருப்பார், நேருவின் `தாராள மனப்பான்மை` அதை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
உண்மை என்னவென்றால், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370ஐ வடிவமைத்தவர்களில் முக்கியமானவர் சர்தார் படேல்.

 சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியான இந்தியாவின் இரும்பு மனிதர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த தூண்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரி நான்காம் தேதியன்று, ஆர்.எஸ்.எஸ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்தவர்

' பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன,' என்றும் அறிவித்தார்.  காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு பொருமியவர்

ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவி இல்லாமல் காந்தி கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்றும் நிரம்பியவர்.. 

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் மீதான தடையை நீக்கியதற்கு ஜனநாயகம் என்ற நடுநாயகம் தான் காரணம். அதோடுகூட, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவுறுத்தலும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

தனக்கும் நேருவுக்கும் இடையில் பகைமை இருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து மறுத்துவந்தார் சர்தார் படேல். அவர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே பேசினார், ''நாடு எதிர்கொண்டிருக்கும் அனைத்து பிரச்ச்சனைகளிலும் நான் பிரதமருடன் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இருவரும் எங்கள் தலைவர் மகாத்மா காந்தியின் பாதத்தில் அமர்ந்து பாரதத் தாயின் விடுதலைக்காக பாடுபட்டோம். இன்று மகாத்மா நம்முடன் இல்லை. இந்த நிலையில் நாங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதைப் பற்றி சிந்திக்கக்கூட மாட்டோம்.''

படேல் நாட்டின் முதல் பிரதமராகும் வாய்ப்பை நேரு தட்டிப் பறித்தார் என்று சங்க பரிவாரம் கூறுவது போல படேல் நினைக்கவில்லை என்பதை அவரே பலமுறை சொல்லிவிட்டார். சர்தார் வல்லபாய் படேல், சாவர்கர்  விரும்பிய இந்தியாவை அல்ல, மகாத்மா காந்தி கனவு கண்ட உன்னத பாரதத்தை உருவாக்கவே நினைத்தார்.

இந்தியாவை 'இந்து நாடாக' மாற்றும் எண்ணத்தை 'பைத்தியக்காரத்தனம்' என்று வல்லபாய் படேல் வெளிப்படையாகவே விமர்சித்தார், 

இத்தகைய உயர்ந்த வரலாற்றுக்கு சொந்தகாரர் பட்டேல்
உயரமானவருக்கான உயரமான சிலை பெருமைக்குரியது...
அதை மூன்று லட்சம் கோடி செலவிட்டு கட்டியிருந்தாலும் தகும்...

தயை கூர்ந்து மோதியை
விமர்சிக்க பட்டேலை அவமான படுத்தாதீர்...  
அவர் நம் வரலாற்று நூல்களில் பெருந்தடம் பதித்தவர்...
நம் நினைவு சின்னமாய் 
சிலையாய் உயர்ந்து நிற்க தக்கவர்...
புகழ் மாலையிட வேண்டியவரை
இஷ்டத்திற்கு பேசுவது...
தந்தை பெரியாரை சங்கிகள் பேசுவது போலாகி விடும்

(படத்திலிருப்பது நாடாளுமன்றதிற்குள் நேரு வைத்த பட்டேலின் திருவுரு)

Courtesy
Adv. Prof.Mr.kennady sir

Sunday, March 29, 2020

என்ன செய்யவில்லை நேரு..?*********************************

தி லீஃப்லெட் இணைய தளத்தில்  Nehru in the age of Corona virus என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு எப்படி இந்தியாவை ஒரு அறிவியல் சிந்தனையின் அடிப்படையிலான ஒரு தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்; அதற்காக என்னவெல்லாம் முயற்சிகளை மேற்கொண்டார் என்று சொல்வது தான் அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம். 

1. நோய்கள், ஏழ்மை, துயரங்களில் இருந்து அறிவியல் விடுவிக்கும் என்று நேரு நம்பினார். ஒரு தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதில் அறிவியலின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். 

2. நேருவின் அறிவியல் மீதான ஆர்வம் அவர் கேம்ப்ரிட்ஜில் படித்த காலத்திலேயே உருவாகி விட்டது. அவர் காலத்தின் முக்கியமான அறிவு ஜீவி விஞ்ஞானிகளான ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன் போன்றவர்களுடன் அவருக்கு நல்ல நெருக்கம் இருந்தது.

3. நேரு பிரதமரானவுடன் இந்தியாவில் அறிவியல் கட்டமைப்பை இரு விதங்களில் உருவாக்க நினைத்தார். முதலில் மேலை நாடுகளில் இருப்பதைப் போன்ற அமைப்புகளை உருவாக்குவது. 1949ல் "மாஸச்சூஸட்ஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி"க்கு அவர் மேற்கொண்ட விஜயமே, இந்தியாவில் முதல் ஐந்து ஐஐடிக்களை உருவாக்க காரணமாக அமைந்தது. அவை, காரக்பூர் (1950), பாம்பே  (1958), மெட்ராஸ் (1959), கான்பூர் (1959), தில்லி (1961).

4. இரண்டாவதாக, அந்த கால கட்டத்தில் முக்கியமான அறிவியல் வல்லுநர்களை தேசத்தைக் கட்டி அமைப்பதில் இணைத்துக் கொண்டார்.  விக்ரம் சாராபாய், சர் சி.வி. ராமன், ஹோமி ஜே பாபா, சதீஷ் தவான், எஸ்.எஸ். பட்நாகர் ஆகியோர் அவர்களில் சிலர். 

5. அறிவியலை வளர்த்தெடுக்க அரசின் ஆதரவு தேவை என்பதைப் புரிந்துகொண்டார் நேரு. அவர் கால கட்டத்தில்தான் அணுசக்தித் துறை (1954), பாபா அணு ஆய்வு மையம் (1954), தி ஃபிஸிகல் ரிசர்ச் லேபோரட்டரி  (1947), இஸ்ரோ (1962) ஆகியவை உருவாக்கப் பட்டன. "கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்" மேம்படுத்தப் பட்டது.

6. எஸ்எஸ் பட்நாகரின் தலைமையில் நேஷனல் கெமிக்கல் லெபோரட்டரி, நேஷனல் ஃபிஸிகல் லெபோரட்டரி, ஃப்யூயல் ரிசர்ச் ஸ்டேஷன், க்ளாஸ்  & செராமிக்ஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டிடியூட், நேஷனல் மெட்டலார்ஜிகல் லெபோரட்டரி ஆகியவை உருவாக்கப் பட்டன. 

7. நேருவைத் தூற்றுவோர் இப்போதைப் போலவே அப்போதும் இருந்தார்கள். போலித் தேசிய உணர்வை வைத்து அவரது அறிவியல் முயற்சிகளை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அறிவியலுக்கு நாடு என்ற வரையறை கிடையாது என்றார் நேரு. 

8. 1700களில் இங்கிலாந்தில் பெரியம்மை பரவியபோது அரசின் ஆன்-இன் மகன், பட்டத்து இளவரசன் அதற்குப் பலியானான். பெரும் எண்ணிக்கையில் பிரபுக்கள் அதற்கு பலியானார்கள். அப்போது எப்படி பெரியம்மை அந்தஸ்து பார்க்காமல் பலிவாங்கியதோ, அதேபோல இப்போது கோவிட் - 19 பரவ ஆரம்பித்துள்ளது. இந்தத் தருணத்தில்தான், பெரும் எண்ணிக்கையில் பெரும் நன்மைகளைச் செய்யும் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவு முக்கியத்துவம் பெறுகிறது.
 
9. இப்போது சோஷலிஸ்ட் என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க பெரும் முயற்சி நடக்கிறது. ஆனால், இந்த சோஷலிஸ கட்டமைப்புதான் பெரியம்மை, போலியோ, ப்ளேக் போன்ற பெரும் நோய்களை ஒழித்தது. 

10. இந்தியா சுதந்திரம் பெறும்போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலேரியா காய்ச்சல் ஏற்படக் கூடிய அபாயத்தில் வாழ்ந்தார்கள். இதனைக் கட்டுப் படுத்தும் முயற்சி 1953ல் துவங்கியது. பத்தே ஆண்டுகளில் நிலைமை மாறியது. உள்ளாட்சி அமைப்புகளே அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும் என்ற அளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டது. 

11. 1951ல் பெரியம்மையினால்  1,48,000 பேர் செத்துப்போனார்கள். பத்தாண்டுகளில் இது 12,300ஆகக் குறைக்கப் பட்டது. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் கொள்ளை நோய்களை ஒழிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டது. 

12. 1940களில் இந்தியாவில் 3 சதவீதம் பேரின் மரணத்திற்கு ப்ளேக் நோய் காரணமாக இருந்தது. 1950களில் அந்நோய் முழுமையாக ஒழிக்கப் பட்டது.  பால்வினை நோய்கள், தொழுநோய், ஃபிலாரியாசிஸ், டிப்தீரியா, டைஃபாய்ட், நிமோனியா, மெனிஞ்ஜிட்டிஸ், ராபிஸ் ஆகியவை இந்தியா முழுவதும் கொத்துக் கொத்தாக ஆட்களை பலிவாங்கின. இவை அனைத்துமே இந்தியாவின் பொது சுகாதார அமைப்பின் மூலம் கட்டுப் படுத்தப் பட்டன. அரசு முன்னெடுத்த தடுப்பூசித் திட்டங்கள், கட்டுப் படியான செலவில் கிடைத்த மருத்துவ உதவிகள் இதற்கு உதவின. 

13. கொள்ளை நோய்களைக் கட்டுப் படுத்த மருத்துவர்கள் தேவை. அதற்கு மருத்துவக் கல்லூரிகள் தேவை. 1946ல் 15ஆக இருந்த மருத்துவக் கல்லூரி, 1965ல் 81ஆக உயர்ந்தது. மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை 1,200லிருந்து 10,000ஆக உயர்ந்தது. 

14. உலகம் ஒரு கொள்ளை நோயோடு போராடிக் கொண்டிருக்கும் போது, நேரு முன்னெப்போதையும் விட இப்போது தேவைப் படுகிறார். பொதுச் சுகாதாரத்தில் முதலீடு செய்த சீனா,  தைவான், வியட்நாம், சிங்கப்பூர், க்யூபா ஆகியவை வளர்ந்த நாடுகளை விட சிறப்பாக கொரோனாவை எதிர் கொள்கின்றன. 

15. 1956ல் ஆல் இந்தியா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் உருவாக்கப் பட்டது. 1958ல் மௌலானா ஆஸாத் மெடிகல் கல்லூரி உருவாக்கப் பட்டது.  1961ல் கோவிந்த் வல்லப பந்த் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிகல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் உருவாக்கப் பட்டது. 

         இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப் பட்டே இராத சில அறியாமைக் கால வல்லூறுகள் இப்போது நாட்டை ஆள்கிறோம் என்னும் பெயரில் குட்டிச் சுவராக்கி விட்டன. கண்களை மூடிக் கொண்டு இந்த ஃபாஸிஸ்ட் ஜடாமுனிகளை ஆதரிக்கும் ஒருவகை மனித வைரஸ்கள் இருக்கும் வரை இந்நிலை மாறப் போவதில்லை..!

நன்றி : Bala Mani

[இந்தக் கட்டுரையை எழுதிய Santosh Paul உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர். டாக்டர் ஹர்ஷ் ஹெக்டே ஒரு எலும்பியல் நிபுணர்]

Wednesday, March 25, 2020

"சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா)


உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான "சாடியோ மானே செனகல்" (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி)  சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது...  

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே  உடைந்த மொபைலுடன்   பல இடங்களில் காணப்பட்டார்.... 

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி  கேட்கப்பட்டபோது 👍 

நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன் என்றார்... 

 நீங்கள் ஏன்  டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே  என்று அவரிடம் கேட்கப்பட்டபோது,

 ​​என்னால்  ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்கமுடியும்   ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்?.... 

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன்,..  என்னால் படிக்க முடியவில்லை,
  எனக்கு காலணிகள் இல்லை, காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை.

ஆனால்  இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன் .. அதனால்தான்  சம்பாதித்த பணத்தில்  மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.. என் நாட்டில் உள்ள ஏழை  குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும்,  உணவும் கொடுக்குறேன்... 

வசதியாக வாழ்வதற்கு பதிலாக  அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" 

என்றார்... அற்புத மனிதன்.

ஜோதிடர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

ஒரு போதும் அசைவம் மது தொடக் கூடாது;

குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் உபாசனா தெய்வம் இஷ்ட தெய்வம் கால தேவன் என்ற மஹா கால பைரவரை அல்லது ஸ்ரீ வராகி அன்னையை உபாசனை செய்வது நன்று;

ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலை 11.30 முதல் மதியம் 12.30 க்குள் திருச்செந்தூர் கடலில் குளிக்க வேண்டும்;இதன் மூலமாக நமக்கு நவக்கிரகங்களால் தீங்கு நெருங்காது;;

அல்லது

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் திருவண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

பல ஜோதிடர்களுக்கு இந்த வழிமுறை தெரியவில்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தினமும் ஜோதிடம் பார்த்தால் அவர்களின் உடலில் தீராத எரிச்சல் உண்டாகும் பிறருக்கு ஜோதிட ஆலோசனை சொல்வது புண்ணியம் தான் தன்னை கர்மாவில் இருந்து காக்க வேண்டாமா

உங்கள் வாழ்நாளில் குறைந்தது 12 பேர்களுக்கு ஜோதிடம் சொல்லி கொடுங்கள் குரு தட்சிணை வாங்கிக் கொண்டு தான் இலவசமாக சொல்லி தர வேண்டாம்;

மஹா கால பைரவர் எட்டு இடங்களில் சிவலிங்க வடிவத்தில் அருள் ஆட்சி புரிந்து வருகின்றார் ஜோதிடராக இருப்பதால் ஒரு முறையாவது இந்த அட்டவீரட்ட திருத்தலங்களுக்கு சென்று வருவது கடமை ஆகும்;

மாதம் ஒரு செவ்வாய் கிழமை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் இதன் மூலமாக ஜோதிடர்களின் வாக்கு பலிதம் அதிகரிக்கும் 

குல தெய்வ வழிபாட்டினை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துங்கள்;

ஒவ்வொரு அமாவாசை திதி இருக்கும் போதும் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதி இருக்கும் போதும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று மனம் உருகி வேண்டுபவர்கள் அனைத்து வளங்களும் ஆசிகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்;

Tuesday, March 24, 2020

நாழிக்கிணறு


திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.
சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்.

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...